Saturday, April 4, 2009

புங்குடுதீவு கீதம்

புங்குடுதீவெனும் தாயவளே! உனைப்போற்றி நாம் வணங்குகிறோம்
எங்களை ஈன்ற இனியவளே - உனைஎன்றுமே நாம் மறவோம்
மங்கலமோங்கி மகிழ்ச்சி ததும்பிமறுபடி நாம் வாழ்வோம்!
சங்கப் புலவர்கள் போற்றிய சிறப்புகள்சகலதும் - நாம் பெறுவோம்!
தாயே நீ வாழீ! தமிழே நீ வாழீ!எம் - உயிரே நீ வாழீ! உயர்வாய் நீ வாழி!
ஆதவன் முன்பனி போல உன் துயரம்-அம்மா மறைந்து விடும்வேதனை தந்திடும் பகைவனின் வாழ்வுவிரைவினில் முடிந்து விடும்தேசியத்தலைவனைக் காப்போம்! -
ஈழத்தேசம் அமைந்திட உழைப்போம்!பாதைகள் ஒன்றாஇ நடப்போம்! பொதுப்பகைவனை நாங்கள் அழிப்போம்!தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!எம் உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!கோயில் தேவாலயம் விழாக்களை காணும்குளங்களும் வயல்களும் நிரம்பும் - புலம்மேவிய மக்களும் கூட்டமும் சேரும்மேன்மைகள் வந்துகை கூடும்நோயினில் வாடிய வாழ்வது நீங்கிநிம்மதிக் காற்றது வீசும் - தலைவன்நெஞ்சம் கவர்ந்தவள் வீடிது - என்றேபெருமையாய் உலகம் பேசும்!
தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!எம் - உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!
உன்மண்ணிலே தவழ்ந்து வாழ்ந்தவர் - நாங்கள்மறந்திடுவோமோ உன்னைஉன்னில் எழுதிய - ‘அ’னா வரிகளால்உயர்வடைந்தவர்கள் நாங்கள் - தாயே!பனைமர வலிமை பெற்றோம்1 உன் நினைவுடன்நிமிர்ந்திடக் கற்றோம்!தலைவன் வழியிலே நடப்போம்! - வருந்தடைகளை துணிவுடன் கடப்போம்
தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!எம் - உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP